Thursday, June 26, 2014

திருக்குறள் அதிசயங்கள்

திருக்குறளை இயற்றியவர் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் திருவள்ளுவர் ஆவர்.

திருக்குறளின் வயது

இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது


திருக்குறள் பற்றி அதிகம் கூறத் தேவையில்லை ஏனெனில்  திருக்குறள் பற்றிய நிறைய விடயங்கள் புத்தகங்களிலும்,பல வலைத்தளங்களிலும் மிக இலகுவாக கிடைக்கின்றன. ஆனால் எத்தனை போர்தான் அதன் உண்மையான அர்த்தத்தினை விளங்கி அதனை தமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கிறார்கள்?

திருக்குறள் பற்றிய சில முக்கிய அதிசயங்கள், சிந்தனைகள் சில


திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் மறு பெயர்கள்   

  • வள்ளுவன்
  •  செந்நாப் போதார்
  •  தெய்வப் புலவர்
  •  நாயனார்

திருக்குறளின் வேறு பெயர்கள் 

  •  முப்பால்
  • பொதுமறை
  • தமிழ்மறை
  • உலகப் பொதுமறை
  • உத்தரவேதம்
  • தெய்வநூல்
  • பொய்யாமொழி
  • வாயுறை வாழ்த்து
  • திருவள்ளுவம்

திருவள்ளுவர் நினைவகங்னள் 

  • திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
  • திருவள்ளுவர் இரட்டைப் பாலம்
  • வள்ளுவர் கோட்டம்.

திருக்குறள் விளக்கம்

'இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்' 

 திருக்குறள் கலை (திருக்குறளின் மறுவடிவம்) 

  • குறள் பீடம் விருது
  • திருவள்ளுவர் சிலை
  • திருவள்ளுவர் விருது
  • திருவள்ளுவர் (திரைப்படம்)
  • திருவள்ளுவர் (இதழ்)
  • திருக்குறள் கலைக்காட்சி
  • திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்

திருக்குறள் சிந்தனைகள்   

  • திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. 
  • திருக்குறளில் 'தமிழ்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
  • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
  • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
  • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
  • திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
  • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு.போப் (Rev. Dr. G. U. Pope)
  • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
  • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது (9)
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
  • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

1 comment:

adw