Wednesday, June 17, 2015

வழிபாடு - Worship in Tamil

வழிபாடு என்பதன் கருத்து ஏதோவொரு முக்கிய காரணத்தின் நிமிர்த்தம் நம்பிக்கையுடன் பணிந்து கேட்டல் எனலாம்.

இவ் வழிபாடானது மனிதனை காக்கும் கவசமாக விளங்குகிறது

வழிபாட்டினை பிராத்தனை, பூஜிப்பது என்றும் கூறலாம்.

இச் செயல்பாடனது ஆதி காலம் தொட்டே இருந்ததுக்கான சான்றுகள் உள்ளன எப்படி எனில்

ஆதி மனிதனின் வழிபாடானது இயற்கை சக்தியைச் சார்ந்திருந்தது (சூரியன்,சந்திரன்,மழை,காற்று,தீ ......)
ஏனெனில் சில வேளைகளில் அவற்றின் சீற்றங்களை குறைப்பதற்காகவும், அச்சத்தை அகற்றுவதற்கும், தன் வாழ்க்கைச் சூழலையும் அனுசரிக்கவும் தேவையான நேரத்தில் அதன் பிரயோசனத்தையும் அடையவதற்குமாக இருந்தது.

காலப்போகில், அறிவு ,நாகரீக வளர்ச்சியின் நிமிர்த்தம்

இயற்கை சக்தியை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய சக்தி ஒன்று சதாரண கண்ணுக்கு புலப்படாமல் இருக்குது என்பதை அறிந்த பின் அச்சக்திக்கு கடவுள் எனப் பெயரிட்டான். ( பெரும்பாலானவை விஞ்ஞான பூர்வமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது )

பிற்பாடு  இச் சக்கிக்கு  பல உருவம் கொடுத்தார்கள், குறியீடுகளை வழங்கிளார்கள் , வழிபடும் முறையை வகுத்தார்கள், மதங்களை வகுதத்தனர், மக்களை மூடர்களாக்கினார்கள்

வழிபாடு வளர்ச்சியடைந்த விதம்

  1. இயற்கை (சூரியன், சந்திரன்....) 
  2. ஆவி பேய் 
  3. விலங்குகள் (நாகம்,கருடன்,பசு....),
  4. மரம் (அரசு,வேம்பு,....)
  5. உருவங்கள் (லிங்கம், கணபதி,,யேசு ,புத்தர்,........)
  6. உருவமற்ற முறை (இஸ்லாம்,பென்திகோஸ்,சீக்கியம்......)
  7. தன்னை விடவும் சக்தி பொருந்திய மனிதர்களை வழிபடும் முறை 
    1. சித்தர்கள் 
    2. சத்ய சாய் பாபா
    3. பாப்பாண்டவர்
    4. இராமகிருஷ்னர்
    5. பௌத்த பிக்குகள்
    6. ஆலயங்களிள் பூஜிப்பவர்கள்
    7. உயிர் நீத்தவர்கள் 
 இதன் பிற்பாடுதன் இவ்வுலகில் பிரச்சனைகள் ,சண்டைகள் என்பன ஆரம்பமாயின  என வரலாற்றை ஆராய்கையில் அறியமுடிகிறது.


வழிபாட்டின் நோக்கம்

  1. வாழ்க்கையில் வளம் பெற
  2. நோய் நெடிகள் குணமாக
  3. மன அமைதிக்காக
  4. உயிர் விட்ட (இறந்த) உறவுகளின் ஆத்மா சாந்தியடைய
  5. மலட்டுத்தன்மை நீங்கி மக்கட்பேறு அடைய
  6. எண்ணம் சிந்தனைகளில் தெளிவு
  7. நினைத்தது கிடைக்க வேண்டும்.
  8. கெடுதல் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க அல்லது மன்னிப்பு

வழிபடும் முறைகள்

  • பொதுவாக பூக்களை வைத்தே வழிபடும் முறையானது பொதுவாக உள்ளது (இஸ்லாம் மதத்தின் வழிபாபட்டு முறையில் பூக்களுக்கு இடமில்லை)
  • ஊது பத்திகள்,சாம்பிராணி வேறு நறுமணப் பொருட்களினால்.
  • இரு கைகளை கூப்பியும், விரித்தும்
  • கண்களை மூடியும் திறந்த நிலையிலும் 
  • பத்மாசனம்,பாலாசனம் ,நின்று ,நாற்காலியில் இருந்தும் ,முட்டுக்காலில் இருந்தும்
  • உண்ணாவிரதம், நேன்பு
  • மௌன விரதம்
  • பாதயாத்திரை  

வழிபடும் வழிகள்

  • மந்திரம் உச்சரித்தல் (மொழி- பாலி சமஸ்கிரதம்,அராபி)
  • ஓதுதல்
  • இசைக்கருவிகளை இசைத்து பாட்டுப்பாடி
  • தியானம்
  • தெய்வம் ஆடுதல்
  • மிருக பலி 
  • பொங்கல், படையல்
  • தாய் மொழியில் வேண்டுதல்  
உளவியல் கருத்துப்படி வழிபாடு என்பது மன நிம்மதி தருகின்ற ஒரு தீர்வு

 ஏனெனில் மனித வாழ்க்கையில் அடுத்தவர் மீது நம்பிக்கை குறைதல், அடுத்தவரை ஜெயிக்க முடியாமை பேன்ற நேரத்தில்தான் கடவுளையும் வழிபாட்டினையும் செய்கிறேம்.
 இது ஏமாற்றத்தையும் இயலாமையுமே காட்டுகிறது ஆகவே 

மனிதர்களுக்கிடையிலான நம்பிக்கையை  பலப்படுத்தினால் வழிபாடு எங்கோ போய்விடும்,ஆனால் அதை செய்ய உலகம் விரும்புமா ?
வழிபாடு
வழிபாடு

2 comments:

  1. வழிபாடு பற்றி..''பிராத்னை என்பது ஒரு தொலைதூர தொலைபேசி.,ஆனால் மறுமுனையில் யாரும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.,''.சரிதானே..,

    ReplyDelete

adw