Wednesday, January 4, 2017

கவரும் வாசகங்கள்

 சில வாசகங்களை அன்றாடம் வாசிக்கவே , கேட்கவோ முடிகிறது .ஆனால் அவ் வாசகங்களில் சொல்லப்பட்ட வைகளை நாம் ஒரு போதும் பின்பற்றுவது இல்லை ஏன் எனில் சில நேரங்களில் மறந்து விடுதல் , தேவை அற்றவை என ஒதுக்கிவிடுதல் அல்லது அதை பிரயோகிக்க தயக்கம், பிரயோகிக்க தக்க தருணம் வரை காத்திருத்தல் ஆகும்.

கீழே தரப்பட்ட சில முக்கிய வாசகங்கள்...............................


வாழ்க்கை
வாழ்க்கை



✳பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்.
✳உரியவர்களிடம் சொல்லுங்கள்.ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
✳நடப்பதைப் பாருங்கள்.நடந்ததைக் கிளறாதீர்கள்.
✳உறுதி காட்டுங்கள்.பிடிவாதம் காட்டாதீர்கள்.
✳விவரங்கள் சொல்லுங்கள்.வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
✳தீர்வை விரும்புங்கள்.தர்க்கம் விரும்பாதீர்கள்.
✳விவாதம் செய்யுங்கள்.விவகாரம் செய்யாதீர்கள்.
✳விளக்கம் பெறுங்கள்.விரோதம் பெறாதீர்கள்
✳சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.
✳செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள்.
✳எதிர் தரப்பும் பேசட்டும்.என்னவென்று கேளுங்கள்.எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
✳நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள்.
✳தானாய்த்தான் முடியுமென்றால்,வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....* 

# வாழ்க்கை குறுகியது, ஆனா  அழகானது 

1 comment:

  1. அனைத்தும் அருமை...

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete

adw