Sunday, September 10, 2017

சில முக்கிய சிந்தனைகள்

1. சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டடு
அவை:- புண்ணியமும், பாவமுமாகும் ஆகும்.

நீ செய்த புண்ணியங்களைதருமங்களைநீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும்.

நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும்.

குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்.

ஆதலினால் நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே; பாவத்தைக் கூறு.

2.     நீ இறைவனுடைய கருனையைப் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.

அது வெறும் வணக்கமும் வழிபாடும் மட்டுமன்று.

துன்பமுற்றுத் துடிக்கிற உயிர்களிடம் நீ கருனை செய். அவற்றின் துன்பத்தை நீக்கு.
நீ பிற உயிர்களிடம் கருனை செய்தால்
கடவுள் உன்னிடம் கருனை செய்வார்.
கருணையால் கருணையைப் பெறலாம்.
இதனை ஒருபொழுதும் மறவாதே.

3.    உலகத்திலே நீ இரு. ஆனால் உலகம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.

குடும்பத்தில் நீ இரு. ஆனால், குடும்பம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.

உலகமும் குடும்பமும் உள்ளத்தில் புகுந்தால்
நீ அழுந்திவிடுவாய்.

வண்டிமேல் நீ ஏறு; வண்டி உன்மேல் ஏறக்கூடாது.

கப்பல் கடலில் இருக்க வேண்டும், கடல்
கப்பலில் புகக்கூடாது. கடல் நீர் கப்பலில் புகுந்தால் கப்பல் அழிந்திவிடும்.

4.    வேறு எந்தப் பிராணிகளுக்கும் இல்லாத நரையை உனக்கு இறைவன் தந்தது எதன் பொருட்டு என்று சற்றுச் சிந்தித்துப் பார்; ஏனைய பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே ஏற்பட்டவை;
மனிதனாகிய உன்னில் உறையும் உத்தமனை
அடைய நீ வந்தாய். அதை மறந்தவருக்கு ஓர்
உணர்ச்சி வரும்பொருட்டே இறைவன்
நரையைத் தந்தான்.

நரைக்கத் தொடங்கும்போதாவது உன் ஆவி
ஈடேறும் நெறியில் செல்.

5.    யாசித்து, நெய்யும் பாலும் தயிரும் சேர்நத் சிறந்த அன்னத்தை உண்பதைவிடஉழைத்து உண்ணும் தண்ணீரும் சோரும் சிறந்தது.

வீரமும் புகழுமில்லாமல் மங்கி நெடுங்காலம் இருப்பதைவிட, வீரமும் புகழும்  பெற்றுச்
சிறிது காலம் வாழ்வது சிறந்தது.

உமிக குவியல் நெடுநேரம் காந்திக்
கருகவதைவிட, தைலமுள்ள மரம்
ஜொலித்துச் சிறிது நேரம் எரிவது சிறந்தது.

6.    புலன்களை வென்றவனே வீரன்.
இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி.

துன்பங்களைப் பொறுப்பவனே தவசி.

விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான்.

அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன்.

கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.

7.    அழுக்கு மூன்று வகையாகும்..
i)    மன அழுக்கு. அவை:- பொறாமை, ஆசை, கோபம்,
பகை என்பன.
இந்த மன அழுக்கைத்தியானம்என்ற நீரால் கழுவுக.
ii).    வாயழுக்கு, அவை:- பொய், புறங்கூறல், தீச்சொல்
என்பன.
இந்த வாயழுக்கைத்துதிஎன்னும் நீரால் கழுவுக.
iii).    மெய்யழுக்கு. அவை:- கொலை, புலை, பிறன்மனை
நயத்தல், களவு முதலியன.
இந்த மெய்யழுக்கைஅர்ச்சனைஎன்னும் நீரால் கழுவுக.

8.    நாவுக்கு அடிமையாகாதே! ‘நல்லுணவு எங்கே? எங்கே?
என்று தேடி ஏங்காதே. இறைவனருளால் கிடைத்ததை உண்டு திருப்தியடை.

நாவுக்கு அடிமையானால் உனது நல் குறையும்.

மீன் சதா உணவாசையினால் ஒழியாமல் தண்ணீர்ல்,
உலாவுகிறது, ஒருசமயம் உணவாசையால் தூண்டிலில் பட்டு இறந்துவிடுகிறது.

9.    பாம்பு, தேள், நட்டுவாக்கிலி முதலிய பெருந் துன்பத்தைச் 
செய்யும் உயிர்களைப் போலவும்.
பெருச்சாளி, எலி, பூனை, நாய் முதலிய துன்பத்தைச் செய்யும் உயிர்களைப் போலவும்,
கொசு, மூட்டை பூச்சி, உணி முதலிய சிறு துண்பத்தைச்
செய்யும் உயிர்களைப் போலும் நீ இருக்காதே.

அனில் என்ற உயிரை நோக்கு; அது ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்கிறது சேதுபந்தனத்தில்  உதவி செய்தது. அதுபோல் வாழ்தல் வேண்டும்.

10.     பிறர் உன்னை வைவார்களாயின் அந்த வன்சொற்களை இன் சொற்களாக கருது.
நீ எக்காரணத்தைக் கொண்டும் எப்போதும் எவ்விடத்தும் பிறரை வன்சொல் கூறி வையாதே.
கிடைத்தது கூழாயினும் அதனை
நெய்யன்னமாகக் கருதி உணவு செய்.
பழம் பாயேயானாலும் பஞ்சனையாகக் கருதிப் படு.
கசப்புப் பெருளாயினும் அதனைக் கற்கண்டாகக் கருதி

உட்கொள். அதனால் மெய்ப்பதம் காண்பாய்.

No comments:

Post a Comment

adw