Wednesday, March 15, 2017

நன்றி - தத்துவம்

நன்றி

நன்றி மறப்பது நன்றன்று , ஆனால் தற்போதைய வாழ்க்கை நடைமுறையில் நன்றி சொல்லும் பழக்கம் சற்று குறைந்து கொண்டு செல்வதாக அவதானிக்க முடிகிறது. 

நன்றியைப் பற்றி இறைப்புலவர் திருவள்ளுவர் மிக நன்றாக சொல்லியுள்ளார். அதைவிட அன்றாடம் எம் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு நாம் நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம்

கீழே சில நன்றிகளின் வகைகள் ...


  1.  மனதார நன்றி சொல்லவேண்டியவைகள்

  •  எனது அஹம்பாவங்களை தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத் தந்த என் கஷ்டங்களுக்கு
  • என்னை அவமரியாதை செய்து எனக்கு வைராக்கியம் வரக்காரணமான என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
  • எனக்கு வலியைத் தந்து அடுத்தவரின் வலியை எனக்குப் புரியவைத்த புரியாத நோய்களுக்கு 
  • எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த, என் பலவீனத்திற்கும், உடலுக்கும்.
  • என் பலத்தை நான் உணர்ந்து என் வாழ்வை நானே நடத்தக் காரணமான என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
  • என் உடல் உறுப்புகளின் மதிப்பை எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த உடல் ஊனமுற்றோருக்கு
  • என் பெற்றோரின் பெருமையை,என் புத்தியில் அழுத்தமாய் பதித்த அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு.
  • ஒரு சிரிப்பினால் உலகையே வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச் சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு.
  • பணத்தினால் மட்டுமே வாழ்வில் எல்லா சுகமும் கிடைத்துவிடாது என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத பணக்காரர்களுக்கு.
  • இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும்..  எனக்கு என்னை ஆத்மா என்று உணர வைக்க என்னை குருவிடத்தில் சேர்ப்பித்த என்னுடைய வாழ்க்கைக்கு என்றென்றும் மனதார நன்றி . . . . !!!

No comments:

Post a Comment

adw