Wednesday, October 19, 2016

அன்னை தெரசா அவர்களின் பொன்வரிகள்


  •  இறக்கத்தான் பிறந்தோம். வாழும் வரை இரக்கத்தோடு இருப்போம்.
  • அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது.
  • குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.
  • நீங்கள் பிறரின் தவறை மன்னித்தால்; கடவுள் உங்கள் தவறை மன்னிப்பார்.
  • வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்.
  • வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை.
  • அன்புதான் உன் பலவீனம் என்றால்; நீயே மிகப்பெரிய பலசாலி.
  • மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.
  • தண்டனைத் தர தாமதி;மன்னிக்க மறுசிந்தனை வேண்டாம்.
  • உனக்கு உதவியோரை மறக்காதே.நீ பிறருக்கு உதவவும் மறக்காதே.
  • உன்னை நேசிப்பவரை வெறுக்காதே.உன்னை வெறுப்பவரையும் நேசி.
  • உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.உன்னை நம்பாதவரையும் ஏமாற்றாதே.
  • புன்முறுவலோடு உதவி செய்வோரை ஆண்டவர் அன்பு செய்கின்றார்.
  • நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர் மீது அக்கறையற்று இருப்பதே.
  • பிறர் நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல.
  • பிறர் தவறுகளுக்கு தீர்ப்பிடத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் கிடைக்காது.
  • உதவும் கரங்கள், செபிக்கும் உதடுகளைவிட மேலாவை.
  • எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல; எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.
  • குற்றமற்றவரைப் பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது.
  • புன்னகையே அன்பின் ஆரம்பம்.
  • ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
  • உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய்.
  • நீ வாழ, பிறரை அழிப்பதே உன்னிலுள்ள மிகப் பெரிய வறுமை.
  • வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.
  • உன் வெற்றி அல்ல, உதவும் உள்ளமே கடவுளுக்குத் தேவை.

No comments:

Post a Comment

adw